sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாநில அந்தஸ்திற்காக ஒமர் அப்துல்லா சுறுசுறுப்பு: நேற்று அமித்ஷா: இன்று மோடி

/

மாநில அந்தஸ்திற்காக ஒமர் அப்துல்லா சுறுசுறுப்பு: நேற்று அமித்ஷா: இன்று மோடி

மாநில அந்தஸ்திற்காக ஒமர் அப்துல்லா சுறுசுறுப்பு: நேற்று அமித்ஷா: இன்று மோடி

மாநில அந்தஸ்திற்காக ஒமர் அப்துல்லா சுறுசுறுப்பு: நேற்று அமித்ஷா: இன்று மோடி

7


ADDED : அக் 24, 2024 08:12 PM

Google News

ADDED : அக் 24, 2024 08:12 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக டில்லியில் முகாமிட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடுகட்சி முதல்வர் ஒமர் அப்துல்லா , நேற்று (அக்.23)மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இன்று (அக்.24) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைபிடித்தது. ஜம்மு-காஷ்மீர் முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்றார்

.பின்னர் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்திற்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து நேற்று (அக்.23) டில்லி சென்ற முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க தன் அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மான நகலையும், துணை நிலை கவர்னர் அளித்த ஒப்புதல் நகலையும் வழங்கினார்.

இன்று (அக். 24) பிரதமர் மோடியை சந்தித்து தேர்தலுக்கு முன் பா.ஜ., அறிவித்துள்ளபடி ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். முன்னர் இருந்த நிலைமை மீண்டும் தொடர வேண்டும் உள்ளிட்ட அதே கோரிக்கையை வலியுறுத்தினார்.






      Dinamalar
      Follow us