sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலை: பீஹார் முதல்வர் நிதிஷ் அறிவிப்பு

/

5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலை: பீஹார் முதல்வர் நிதிஷ் அறிவிப்பு

5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலை: பீஹார் முதல்வர் நிதிஷ் அறிவிப்பு

5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலை: பீஹார் முதல்வர் நிதிஷ் அறிவிப்பு

2


ADDED : ஜூலை 16, 2025 11:39 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 11:39 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது உட்பட, 30 பரிந்துரைகளுக்கு நிதிஷ் குமார் தலைமையிலான பீஹார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்ட சபைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்ட்சிகள் பீஹாரில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி வருகின்றன.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 13ம் தேதி சமூகவலைதளத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், 'கடந்த 2005 முதல் 2020 வரையிலான காலத்தில் 8 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது' என, தெரிவித்திருந்தார்.

இதைதொடர்ந்து, சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் நேற்று புதிய அறிவிப்புகளை நிதிஷ் அரசு வெளியிட்டுள்ளது. 2025 முதல் 2030 வரையிலான அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது உள்ளிட்ட 30 முக்கிய பரிந்துரைகளுக்கு நிதிஷ் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.






      Dinamalar
      Follow us