பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து ஒருவர் பலி: 5 பேர் கதி என்ன
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து ஒருவர் பலி: 5 பேர் கதி என்ன
UPDATED : அக் 22, 2024 10:07 PM
ADDED : அக் 22, 2024 08:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடம் இடிந்து ஒருவர் உயிரிழந்தார். சிக்கி உள்ள 5 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது.
ஹோரமவு அகரா பகுதியில் இன்று மதியம் கட்டடம் இடிந்து விழுந்தது. அப்போது 20 பேர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர், 14 பேரை பத்திரமாக மீட்டனர். ஒருவர் உயிரிழந்தார். இடிபாடுகளுக்குள் 5 பேர் சிக்கிக் கொண்டு உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
பெங்களூருவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இந்த கட்டடம் இடிந்து விழுந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.