ADDED : ஏப் 05, 2024 08:04 PM

கண்ணுர்: கேரளாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 2 பேர்
படுகாயமடைந்தனர்.
கேரளா மாநிலம் கண்ணூரில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதி வாசிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். அவர் கைவேலிக்கால் பகுதியைச் சேர்ந்த ஷெ ரீன் என்ற கம்யூ. பிரமுகர் என கூறப்படுகிறது. மேலும் இருவர் காயமடைந்தனர்.
முளியத்தோட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது தவறுதலாக இச்சம்பவம் நடந்ததா ? இரு தரப்பு மோதலில் நடந்ததா ? என்பது குறித்து 'கண்ணூரின் பனூர் காவல் நிலைய போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தான் கர்நாடக தலைநகர் பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது பெரும் பீதியை கிளப்பிய நிலையில், கண்ணூரிலும் வெடி குண்டு வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

