sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது

/

ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது

ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது

ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது


ADDED : ஜூன் 07, 2025 09:27 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 09:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் வாயிலாக பணம் சம்பாதிக்கலாம் என, நம்ப வைத்து ரூ. 73.27 லட்சத்தை மோசடி செய்த வழக்கில், திருச்சூர் வாலிபரை, சைபர் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு ஒற்றைப்பாலத்தைச்சேர்ந்தவர், ஆன்லைன் வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி ஏமாற்றி, 73.27 லட்சம் ரூபாய் பணம் பறித்து விட்டனர் என, பாலக்காடு சைபர் குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி டி.எஸ்.பி., பிரசாதின் மேற்பார்வையில், சைபர் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் நடத்திய விசாரணையில், திருச்சூர் மாவட்டம் குண்டுக்காடு குறிச்சிக்கரை பகுதியை சேர்ந்த அச்சு 29, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் சசிகுமார் கூறியதாவது:

இந்த மோசடி சம்பவம் 2024 டிச., மாதம் நடந்துள்ளது. டெலிகிராம் வழியாக புகார்தாரரை தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்தபடியே 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் அதிகமாக சம்பாதிக்கலாம் என வாக்குறுதி அளித்து, அவ்வப்போது டெபாசிட் தொகையாக ரூ.73.27 லட்சம் வாங்கப்பட்டது.

மோசடி நபர் அச்சு, ஏமாற்றியுள்ளதும், மோசடிக்காக மட்டுமே பயன்படுத்தும் வங்கிக் கணக்கில் கொள்முதல் செய்த பணத்திலிருந்து, பெரியதொரு தொகை அவரது வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளதும் விசாரணையில் தெரிந்தது.

கைது செய்த அச்சுவை, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us