sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'பா.ஜ.,வில் மட்டுமே பூத் பணியாளர் நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு'

/

'பா.ஜ.,வில் மட்டுமே பூத் பணியாளர் நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு'

'பா.ஜ.,வில் மட்டுமே பூத் பணியாளர் நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு'

'பா.ஜ.,வில் மட்டுமே பூத் பணியாளர் நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு'


ADDED : டிச 26, 2024 06:45 AM

Google News

ADDED : டிச 26, 2024 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''பா.ஜ.,வில் மட்டும் தான் பூத் பணியாளர்கள் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி 100வது பிறந்த நாளை, 'நல்லாட்சி தினமாக' பா.ஜ., கொண்டாடி வருகிறது. இதையொட்டி, கட்சி அலுவலகத்தில் வாஜ்பாயி புகைப்பட கண்காட்சியை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா துவக்கி வைத்தார்.

பின், விஜயேந்திரா பேசியதாவது:

கட்சியின் மூத்த தலைவர்கள் எடியூரப்பா, மறைந்த மத்திய அமைச்சர் அனந்த குமார் ஆகியோரின் கடின முயற்சியால், கர்நாடகாவில் பா.ஜ., வளர்ந்து பலத்துடன் இருக்கிறது. இவர்களுக்கு பின்னால், லட்சக்கணக்கான தொண்டர்கள், தங்களின் நேரம், பணத்தை துறந்து பணியாற்றினர்.

பா.ஜ., வளர்ந்துள்ளதை கட்சியின் கட்டடத்தை பார்த்தாலே தெரியும். ஆனால் இதற்கான அடித்தளம் அமைத்ததை பார்க்க முடியாது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, முன்னாள் துணை பிரதமர் அத்வானி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோரை நினைவில் கொள்ள வேண்டும்.

பா.ஜ.,வில் மட்டுமே பூத் அளவிலான ஊழியரும் கூட, நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. பிரதமர் மோடியின் நடவடிக்கையால், வாஜ்பாயின் பிறந்த நாளை, 'நல்லாட்சி தினமாக' கொண்டாடுகிறோம்.

கர்நாடகாவில் 1999ல் ஜே.எச்.பாட்டீல் தலைமையிலான அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில், வாஜ்பாயியும் பங்கேற்றார்.

அதுபோன்று ஹூப்பள்ளியில் நடந்த போராட்டத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூடியதை பார்த்த வாஜ்பாய், ஆச்சரியமடைந்தார். புதுடில்லிக்கு புறப்படும் முன்பு, எடியூரப்பாவை கட்டி அணைத்து வாழ்த்துத் தெரிவித்தார். இத்தகைய தலைவரை, எங்கும் பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

26_DMR_0006

வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி, புகைப்பட கண்காட்சியை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா திறந்துவைத்து பார்வையிட்டார். உடன், மாநில தலைவர் விஜயேந்திரா, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி.






      Dinamalar
      Follow us