sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நீட் தேர்வு விவகாரம்: லோக்சபாவில் ஒத்திவைப்பு: ராஜ்யசபாவில் அமளி

/

நீட் தேர்வு விவகாரம்: லோக்சபாவில் ஒத்திவைப்பு: ராஜ்யசபாவில் அமளி

நீட் தேர்வு விவகாரம்: லோக்சபாவில் ஒத்திவைப்பு: ராஜ்யசபாவில் அமளி

நீட் தேர்வு விவகாரம்: லோக்சபாவில் ஒத்திவைப்பு: ராஜ்யசபாவில் அமளி

28


UPDATED : ஜூன் 28, 2024 05:18 PM

ADDED : ஜூன் 28, 2024 11:40 AM

Google News

UPDATED : ஜூன் 28, 2024 05:18 PM ADDED : ஜூன் 28, 2024 11:40 AM

28


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு துவங்கும்.

முடிவு

நீட் தேர்வு விவகாரத்தை லோக்சபாவில் எழுப்புவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வீட்டில் நேற்று( ஜூன் 27) ‛ இண்டியா' கூட்டணி கட்சியினர் ஆலோசனை நடத்தினர். அதில், இரு அவைகளிலும் நீட் தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து விவாதம் கோரி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி , இன்று பார்லி., இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கான கோரிக்கை கொடுக்கப்பட்டது.

லோக்சபா


லோக்சபாவில், நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசும் போது, நீட் தேர்வு முறைகேட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என்றார்.தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி., சுப்ரியா சுலேவும், நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க வலியுறுத்தினார்.

ஆனால் இதனை ஏற்க சபாநாயகர் ஓம் பிர்லா மறுத்துவிட்டார். இதனையடுத்து அமளி ஏற்பட்டதையடுத்து அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கூடியபோதும் அவையில் அமளி நிலவியது. இதனையடுத்து லோக்சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

ராஜ்யசபா


ராஜ்யசபாவில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை பா.ஜ., எம்.பி., துவங்க இருந்தார். நீட் முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கார்கே வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர். இது ஏற்கப்படாததால், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு அவை கூடியதும், மீண்டும் அமளி ஏற்பட்டது. அதேநேரத்தில் அவை தொடர்ந்து நடந்தது.

மயக்கம்


எதிர்க்கட்சிகள் அமளியின் போது காங்., எம்.பி., பூலோ தேவி மயக்கமடைந்தார். பார்லி., வளாகத்தில் டாக்டர்கள் முதலுதவி அளித்தனர். பிறகு மருத்துவமனையில் அனுமதித்தனர். மத்திய அரசை கண்டித்து பிஜூ ஜனதா தள எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.






      Dinamalar
      Follow us