sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஞானவாபி ஆய்வறிக்கை இரு தரப்புக்கும் வழங்க உத்தரவு

/

ஞானவாபி ஆய்வறிக்கை இரு தரப்புக்கும் வழங்க உத்தரவு

ஞானவாபி ஆய்வறிக்கை இரு தரப்புக்கும் வழங்க உத்தரவு

ஞானவாபி ஆய்வறிக்கை இரு தரப்புக்கும் வழங்க உத்தரவு


ADDED : ஜன 24, 2024 10:20 PM

Google News

ADDED : ஜன 24, 2024 10:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாரணாசி, வாரணாசி ஞானவாபி வளாகம் தொடர்பாக, தொல்லியல் துறை நடத்திய ஆய்வின் அறிக்கையை, வழக்கின் இரு தரப்புக்கும் வழங்க, மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி வளாகம் தொடர்பான வழக்கு, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில், தொல்லியல் துறை ஆய்வு செய்ய, மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்தது.இதையடுத்து, தொல்லியல் துறையின் ஆய்வு நடந்து, கடந்த டிச., 18ல் ஆய்வறிக்கை, சீலிட்ட உறையில் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது ஹிந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று வாதிட்டார். ஆனால், தேவையில்லாத குழப்பங்கள், பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக, தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த அறிக்கையை வெளியிடுவது தொடர்பாக ஆய்வு செய்த மாவட்ட நீதிமன்றம், நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, இந்த அறிக்கையை, வழக்கில் தொடர்புடைய, ஹிந்து மற்றும் முஸ்லிம் என, இரு தரப்புக்கும் வழங்க உத்தரவிட்டது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us