sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆப்பரேஷன் சிந்துாரில் நம் ராணுவம் அடிச்சது 9 இல்ல 16; சொல்வது நாம் அல்ல பாகிஸ்தான்

/

ஆப்பரேஷன் சிந்துாரில் நம் ராணுவம் அடிச்சது 9 இல்ல 16; சொல்வது நாம் அல்ல பாகிஸ்தான்

ஆப்பரேஷன் சிந்துாரில் நம் ராணுவம் அடிச்சது 9 இல்ல 16; சொல்வது நாம் அல்ல பாகிஸ்தான்

ஆப்பரேஷன் சிந்துாரில் நம் ராணுவம் அடிச்சது 9 இல்ல 16; சொல்வது நாம் அல்ல பாகிஸ்தான்

12


UPDATED : ஜூன் 04, 2025 04:22 AM

ADDED : ஜூன் 04, 2025 04:20 AM

Google News

UPDATED : ஜூன் 04, 2025 04:22 AM ADDED : ஜூன் 04, 2025 04:20 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, நம் ராணுவத் தரப்பில் கூறப்பட்டதைவிட அதிக இடங்களை பாகிஸ்தான் இழந்துள்ளதாக அந்நாட்டு ஆவணங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம் ராணுவம் தரைமட்டமாக்கியது.

பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் - -இ- - முகமது தலைமையகம் மற்றும் முரித்கேவில் உள்ள லஷ்கர்- - இ- - தொய்பா பயிற்சி மையம் உட்பட ஒன்பது இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆப்பரேஷன் சிந்துார் குறித்து நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விளக்கமளித்தனர். தாக்குதல் மற்றும் சேதம் தொடர்பான செயற்கைக்கோள் படங்களும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக, 'ஆப்பரேஷன் பன்யான் உன் மர்சூஸ்' என்ற பெயரில் பாக்., ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், நம் ராணுவத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதல் பகுதிகள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயங்கரவாதிகள் இருந்த பஹவல்பூர், முரித்கே உள்ளிட்ட ஒன்பது இடங்களைத் தாண்டி மேலும் ஏழு இடங்களில் நம் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

அங்குள்ள பெஷாவர், ஜாங், சிந்துவில் உள்ள ஹைதராபாத், பஞ்சாபில் உள்ள குஜராத், பவால்நகர், அட்டாக் மற்றும் சோர் ஆகிய பகுதிகளில் கூடுதலாக தாக்குதல் நடத்தப்பட்டதாக படங்களுடன் அந்த ஆவணத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக மிக கடுமையான தாக்குதலை நம் ராணுவம் நடத்தியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆப்பரேஷன் சிந்துாரை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்புகளில், பெஷாவர், அட்டாக் உள்ளிட்ட ஏழு இடங்களில் தாக்குதல் நடத்தியது குறித்து விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

தற்போது பாகிஸ்தான் வெளியிட்ட ஆதாரங்கள் வாயிலாக குறிப்பிட்டதை விட, அதிக இடங்களை நம் ராணுவம் தாக்கியதால் தான், போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியது தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us