sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.1.47 கோடி மோசடி 'மதுரை வீடு' ஓனர் கைது

/

ரூ.1.47 கோடி மோசடி 'மதுரை வீடு' ஓனர் கைது

ரூ.1.47 கோடி மோசடி 'மதுரை வீடு' ஓனர் கைது

ரூ.1.47 கோடி மோசடி 'மதுரை வீடு' ஓனர் கைது

1


ADDED : ஜன 05, 2025 01:46 AM

Google News

ADDED : ஜன 05, 2025 01:46 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்:புதுச்சேரி, அரியாங்குப்பம் காந்திஜி நகரைச் சேர்ந்தவர் ரவிசேகர், 63. இவர், புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் 'மதுரை வீடு' என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

இவர்,ஹோட்டல் விரிவாக்கத்திற்காக, கடலுாரில் உள்ள ஒரு இடத்தின் ஆவணங்களை கொடுத்து, புதுச்சேரி கேன்டீன் வீதியை சேர்ந்த பைனான்சியர் சங்கர், 50, என்பவரிடம் 1.47 கோடி ரூபாய் கடன் பெற்றார்.

ஆவணங்களை சங்கர் ஆய்வு செய்தபோது, இடம் கோவிலுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. போலி ஆவணங்களை கொடுத்து பணம் மோசடி செய்த, ரவிசேகர், அவரது மனைவி ஜெயசக்தி, மகன் அரவிந்தன் ஆகியோர் மீது சங்கர், புதுச்சேரி கோர்ட்டில் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அரியாங்குப்பம் போலீசார், டிச.16ம் தேதி வழக்கு பதிந்து, ரவிசேகர் உள்ளிட்ட மூவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரவிசேகரை , போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us