sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இண்டி கூட்டணியின் பஹல்காம் பார்லி. சிறப்புக் கூட்ட கோரிக்கை: மத்திய அரசு புதிய முடிவு

/

இண்டி கூட்டணியின் பஹல்காம் பார்லி. சிறப்புக் கூட்ட கோரிக்கை: மத்திய அரசு புதிய முடிவு

இண்டி கூட்டணியின் பஹல்காம் பார்லி. சிறப்புக் கூட்ட கோரிக்கை: மத்திய அரசு புதிய முடிவு

இண்டி கூட்டணியின் பஹல்காம் பார்லி. சிறப்புக் கூட்ட கோரிக்கை: மத்திய அரசு புதிய முடிவு

2


UPDATED : ஜூன் 04, 2025 06:28 PM

ADDED : ஜூன் 03, 2025 10:51 AM

Google News

UPDATED : ஜூன் 04, 2025 06:28 PM ADDED : ஜூன் 03, 2025 10:51 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பார்லிமெண்ட் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா கையில் எடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களையும் அழித்தது. இந்த பதிலடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கையை உலக நாடுகளுக்கு தெரிவித்து நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக பார்லி. எம்.பி.,க்கள் குழு உலக நாடுகளுக்கு சென்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி விளக்கியது. அதே சமயத்தில், எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி, பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தை கூட்டி பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந் நிலையில் இண்டி கூட்டணியின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஏற்கனவே ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது.

எனவே தற்போதைய நிலையில், சிறப்புக் கூட்டத்தொடர் என்பது அவசியமற்றது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டாலும், பார்லிமென்டில் பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும், அடுத்து வரக்கூடிய பார்லிமென்ட் தொடரில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றி உரிய விளக்கம் அளிப்பார் என்று மத்திய அரசு தகவல்கள் கூறுகின்றன.






      Dinamalar
      Follow us