sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹாராஷ்டிராவில் பாக்., படகு: பாதுகாப்பு அதிகரிப்பு

/

மஹாராஷ்டிராவில் பாக்., படகு: பாதுகாப்பு அதிகரிப்பு

மஹாராஷ்டிராவில் பாக்., படகு: பாதுகாப்பு அதிகரிப்பு

மஹாராஷ்டிராவில் பாக்., படகு: பாதுகாப்பு அதிகரிப்பு

1


ADDED : ஜூலை 08, 2025 12:15 AM

Google News

1

ADDED : ஜூலை 08, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: கடந்த 2008ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், மஹாராஷ்டிர கடலோரப் பகுதிகளில் எப்போதும் தீவிர கண்காணிப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், ராய்காட் மாவட்டத்தில் உள்ள ரேவ்தண்டா கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று தென்பட்டது. ரேவ்தண்டாவில் உள்ள கோர்லாய் கடற்கரையிலிருந்து, 2 கடல் மைல் தொலைவில் பாதுகாப்பு படையினர் படகை கண்டனர்.

படகில் பாக்., அடையாளங்கள் இருந்ததாகவும், சிலர் கப்பலில் இருந்து இறங்கியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ராய்காட் போலீஸ், வெடிகுண்டு நிபுணர்கள் குழு, கடற்படை மற்றும் கடலோர காவல்படை சம்பவ இடத்திற்கு விரைந்தன.

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக படகை அடையும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

படகு தென்பட்டதை அடுத்து, மாநிலம் முழுதும் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us