sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிக்கு சோதனை சாவடி பணி வேண்டாம்'

/

'பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிக்கு சோதனை சாவடி பணி வேண்டாம்'

'பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிக்கு சோதனை சாவடி பணி வேண்டாம்'

'பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிக்கு சோதனை சாவடி பணி வேண்டாம்'


ADDED : பிப் 19, 2024 06:58 AM

Google News

ADDED : பிப் 19, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'லோக்சபா தேர்தல் வருவதால், சோதனைச்சாவடி பணிகளுக்கு, பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகளை நியமிக்க வேண்டாம்' என, கிராம வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம், பஞ்சாயத்து ராஜ் துறை விடுத்துள்ள கோரிக்கை:

லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. தேர்தலின் போது ஓட்டுச்சாவடிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்வது உட்பட, அனைத்து பணிகளின் பொறுப்பை, கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள் ஏற்க வேண்டும்.

கோடை காலம் நெருங்குவதால், மக்களுக்கு குடிநீர் வழங்குவது, கணினி தொடர்பான பணிகளுக்கு, அவர்கள் அவசியம். நரேகா பணிகளை செயல்படுத்தும் பொறுப்பும் இவர்களிடம் உள்ளது. கூடுதலாக இவர்களுக்கு தேர்தல் பணிகளும் சேர்ந்துள்ளன.

பொதுவாக தேர்தல் நேரத்தில், வாகனங்களை கண்காணிக்க தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். இவற்றுக்கு பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள் நியமிக்கப்படுவர். இம்முறை அவர்களை சோதனைச் சாவடிகளுக்கு நியமிக்க கூடாது. இவர்களுக்கு பதிலாக மாற்று அதிகாரிகளைநியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us