ADDED : பிப் 07, 2024 01:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டயம் கேரளாவின் மூத்த அரசியல்வாதியும், ஏழு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவருமான பி.சி.ஜார்ஜ், 72, கேரள ஜனபக் ஷம் எனும் மதச்சார்பற்ற கட்சியை நடத்தி வந்தார்.
சமீபத்தில் இவர், தன் மகனுடன், டில்லியில், பா.ஜ., தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். எனினும், தன் கட்சியை அவர் இணைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று, கோட்டயத்தில் செய்தியாளர்களிடம் பி.சி.ஜார்ஜ் கூறியதாவது:
திருவனந்தபுரத்திற்கு, வரும் 13ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவுள்ளார். அப்போது, கேரள ஜனபக் ஷம் கட்சி, பா.ஜ.,வுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

