sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வங்கதேசத்தில் அமைதி திரும்ப வேண்டும்: தேர்தல் நடத்தணும் என்கிறார் ஜெய்சங்கர்!

/

வங்கதேசத்தில் அமைதி திரும்ப வேண்டும்: தேர்தல் நடத்தணும் என்கிறார் ஜெய்சங்கர்!

வங்கதேசத்தில் அமைதி திரும்ப வேண்டும்: தேர்தல் நடத்தணும் என்கிறார் ஜெய்சங்கர்!

வங்கதேசத்தில் அமைதி திரும்ப வேண்டும்: தேர்தல் நடத்தணும் என்கிறார் ஜெய்சங்கர்!

5


ADDED : ஏப் 09, 2025 10:23 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 10:23 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'வங்கதேசத்தில் அமைதி திரும்ப வேண்டும். தேர்தல் நடத்த வேண்டும்' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

டில்லியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் நடந்த ரைசிங் பாரத் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நீண்ட நாட்கள் வெளியுறவு அமைச்சர் பொறுப்பு வகிப்பவர் என்ற பெருமையை பெற்றுள்ள ஜெய்சங்கர், வங்கதேச கலவரம், இந்தியா - சீனா உறவு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: வங்கதேசத்தில் தற்போதுள்ள நிலை கவலை அளிக்கிறது. அங்கு சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து இந்தியாவின் கவலையை வெளிப்படையாக தெரிவிக்கிறோம். ஏனென்றால், வங்க தேசத்தின் நலனில் வேறெந்த நாடுகளையும் விட நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம். அது நம் டிஎன்ஏவில் உள்ளது.

வங்கதேசத்தில் அமைதி திரும்பவும், நிலையான ஆட்சி அமையவும் அந்நாட்டு ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக ஆட்சி மலர முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். இந்தியா- சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் புரிந்து கொண்டன. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us