பி.இ.எம்.எல்., தமிழ் மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு
பி.இ.எம்.எல்., தமிழ் மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜன 11, 2025 04:53 AM

தங்கவயல்: தங்கவயல் பி.இ.எம்.எல்., தமிழ் மன்றத்துக்கு 2025 ---- 2026 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆதித்த கார்த்திகேயன் தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்துள்ளதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, தேர்வுக்குழுவினரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கருத்து கேட்கப்பட்டது.
புதிய தலைவராக ஜி.ரமேஷ் குமார், துணைத் தலைவர்-களாக டி.பாபு, என்.சசிகுமார், பொதுச்செயலராக ஜி.முரளிகுமார், இணைச்செயலராக டி.நவீன், துணைச்செயலராக எம்.ஜோசப் குமார், ஒருங்கிணைப்பாளராக ஆர்.தயாள மூர்த்தி, பொருளாளராக எஸ்.வேதமூர்த்தி, ஆலோசனை குழுவில் ஏ.லட்சுமண மூர்த்தி, ஜி.ஜெயப்பிரகாஷ், ஜி.வேலு, கே.ஜி.சங்கர்; தேர்வுக்குழுவில் பி.சுதர்சன், டி.குமார், ஜே.ஜான் ராபர்ட், எம்.சந்திரசேகர், எல்.டோமினிக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு முன்னாள் நிர்வாகிகள் ஏ.ஜெயசீலன், எம்.முனிரத்தினம், ரவி, இருதயராஜ், ஆர்.ராஜேந்திரன் உட்பட பலர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

