sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபரிமலையில் போட்டோஷூட்: கோர்ட் கண்டிப்பு!

/

சபரிமலையில் போட்டோஷூட்: கோர்ட் கண்டிப்பு!

சபரிமலையில் போட்டோஷூட்: கோர்ட் கண்டிப்பு!

சபரிமலையில் போட்டோஷூட்: கோர்ட் கண்டிப்பு!

5


ADDED : நவ 26, 2024 06:10 PM

Google News

ADDED : நவ 26, 2024 06:10 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பத்தனம்திட்டா: சபரிமலை 18 படிகளில் போலீசார் எடுத்த படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, ஐகோர்ட் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சபரிமலை சன்னிதானத்தின் சிறப்பு அதிகாரி பைஜூ அளித்த புகாரின் பேரில், ஏ.டி.ஜி.பி., ஸ்ரீஜித் விரிவான அறிக்கை கேட்டுள்ளார். போட்டோஷூட்டுக்கு வி.ஹெச்.பி.,கேரள பிரிவு அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரளா ஐகோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:

சன்னிதானத்தில் பணிக்கு வந்த போலீசார் திரும்பும் முன் போட்டோ எடுத்துக்கொண்டுள்ளனர். சபரிமலை 18ம் படியில் இதுபோன்ற சம்பவங்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

சன்னிதானத்தில் போலீஸ் அதிகாரிகளின் பணி பாராட்டுக்குரியது. இருப்பினும், இத்தகைய நடவடிக்கைகள் அனுமதிக்கப்படக்கூடாது.

சன்னிதானத்தில் மொபைல் போன் பயன்படுத்த கட்டுப்பாடு தேவை. சன்னிதானம் அனுமதி இல்லாமல் போட்டோ, வீடியோ எடுக்க அனுமதிக்க கூடாது என்பதை தெளிவாக பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us