sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த டில்லி மாநாட்டில் பிரதமர் அழைப்பு

/

கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த டில்லி மாநாட்டில் பிரதமர் அழைப்பு

கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த டில்லி மாநாட்டில் பிரதமர் அழைப்பு

கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த டில்லி மாநாட்டில் பிரதமர் அழைப்பு


ADDED : நவ 26, 2024 01:35 AM

Google News

ADDED : நவ 26, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,: கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ஐ.சி.ஏ., எனப்படும், சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் உலகளாவிய கூட்டுறவு மாநாடு, டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவை பொறுத்தவரை கூட்டுறவு என்பது அடிப்படை கலாசாரமாகவும், வாழ்க்கை முறையாகவும் உள்ளது. நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உள்ளது. கூட்டுறவு தொடர்பான ஒட்டுமொத்த சூழல், கடந்த 10 ஆண்டுகளில் மாற்றம் கண்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு அமைப்பாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே, தனியாக கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. வீட்டுவசதித் துறை மற்றும் வங்கிப் பிரிவிலும் கூட்டுறவு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நாட்டில், இரண்டு லட்சம் வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கூட்டுறவு வங்கித்துறையை வலுப்படுத்த பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவு நிறுவனங்களுக்கு உலகளவில் பெரிய வாய்ப்புகள் உள்ளன.

கூட்டுறவு இயக்கத்தை சுழற்சி பொருளாதாரத்துடன் இணைக்க வேண்டும். இத்துறையில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை ஊக்குவிக்கும் வழிகளைப் பற்றி விவாதிக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில், 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் உள்ளன. இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்த, கூடுதலாக இரண்டு லட்சம் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களை கிராமங்களில் அமைக்க அரசு உறுதி ஏற்றுள்ளது.

கூட்டுறவு அமைப்புகளில், 60 சதவீதம் பெண்கள் உள்ளனர். இதன் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றி வரும் பங்கு பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், நம் அண்டை நாடான பூடான் பிரதமர் தாஷோ டிஷெரிங் டோப்கே, பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பிஜியின் துணை பிரதமர் மனோவா காமிகாமிகா, மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us