அயோத்தியில் ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
அயோத்தியில் ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
UPDATED : நவ 25, 2025 11:52 AM
ADDED : நவ 25, 2025 09:07 AM
முழு விபரம்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் இன்று (நவ.,25) பிரதமர் மோடி காவிக்கொடியேற்றினார். முன்னதாக, அயோத்தி வந்த பிரதமர் மோடி, ராமர் கோவில் செல்லும் பாதையில் ரோடு ஷோ நடத்தினார்.
அயோத்தியில் ராமர் கோவிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது 30 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (நவ.,25) தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி 30 அடி உயர கம்பத்தில் காவிக்கொடியை கொடியேற்றினார். ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
ரோடு ஷோ
முன்னதாக, ராமர் கோவில் செல்லும் பாதையில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார்.
சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ராமர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

