sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அயோத்தியில் ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

/

அயோத்தியில் ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

9


UPDATED : நவ 25, 2025 11:52 AM

ADDED : நவ 25, 2025 09:07 AM

Google News

9

UPDATED : நவ 25, 2025 11:52 AM ADDED : நவ 25, 2025 09:07 AM


Google News

முழு விபரம்

Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் இன்று (நவ.,25) பிரதமர் மோடி காவிக்கொடியேற்றினார். முன்னதாக, அயோத்தி வந்த பிரதமர் மோடி, ராமர் கோவில் செல்லும் பாதையில் ரோடு ஷோ நடத்தினார்.

அயோத்தியில் ராமர் கோவிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது 30 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (நவ.,25) தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி 30 அடி உயர கம்பத்தில் காவிக்கொடியை கொடியேற்றினார். ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

ரோடு ஷோ


முன்னதாக, ராமர் கோவில் செல்லும் பாதையில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ராமர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

மிக்க மகிழ்ச்சி

கொடியேற்ற விழா குறித்து, ராமர் கோவியில் பணியாற்றும் பெண்கள் கூறியதாவது: ராமர் கோவிலில் 25 பெண்கள் வேலை செய்கிறோம். இங்கு வேலை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் கடின உழைப்பு வெற்றி பெற்றது. இது போன்ற விஷயங்கள் எங்கள் காலத்தில் நடப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், அவற்றைக் காண எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், என்றனர்.








      Dinamalar
      Follow us