sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மகளிர் தினத்தன்று பெண்களுக்கு கவுரவம்: முதல்முறையாக பிரதமர் நிகழ்ச்சியில் 'சர்ப்ரைஸ்'

/

மகளிர் தினத்தன்று பெண்களுக்கு கவுரவம்: முதல்முறையாக பிரதமர் நிகழ்ச்சியில் 'சர்ப்ரைஸ்'

மகளிர் தினத்தன்று பெண்களுக்கு கவுரவம்: முதல்முறையாக பிரதமர் நிகழ்ச்சியில் 'சர்ப்ரைஸ்'

மகளிர் தினத்தன்று பெண்களுக்கு கவுரவம்: முதல்முறையாக பிரதமர் நிகழ்ச்சியில் 'சர்ப்ரைஸ்'

3


UPDATED : மார் 07, 2025 09:42 AM

ADDED : மார் 07, 2025 08:48 AM

Google News

UPDATED : மார் 07, 2025 09:42 AM ADDED : மார் 07, 2025 08:48 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று நடைபெறும் குஜராத் நிகழ்வில், இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்கள் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தனது சமூக வலைதள கணக்குகளை பெண்களிடம் ஒப்படைக்க உள்ளார். அன்றைய தினம் பெண்கள் பிரதமர் மோடியின் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்விற்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முழுக்க முழுக்க பெண் போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிரதமர் மோடியின் பாதுகாப்பை பெண் போலீசார் உறுதி செய்வார்கள். பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக 2,300க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையைப் பற்றி குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியதாவது: இந்திய வரலாற்றில் முதல்முறையாக, வான்சி போர்சி கிராமத்தில் உள்ள ஹெலிபேடிற்கு பிரதமரின் வருகையிலிருந்து, மகளிர் தினம் கொண்டாட்டம் நடைபெறும் இடம் வரை அவரது பாதுகாப்பிற்கு பெண் போலீசார் மட்டுமே பொறுப்பாவார்கள்' என்றார்.






      Dinamalar
      Follow us