ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலை திட்டங்கள்: டில்லியில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்
ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலை திட்டங்கள்: டில்லியில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்
UPDATED : ஆக 17, 2025 06:52 AM
ADDED : ஆக 16, 2025 08:57 PM

புதுடில்லி: டில்லியில் இன்று (ஆகஸ்ட் 17) பிரதமர் மோடி, ரூ.11,000 கோடியில் முக்கிய நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
டில்லி செல்லும் பிரதமர் மோடி, இன்று பிற்பகலில் ரோஹினியில் நடைபெறும் விழாவில், தேசியத் தலைநகரில் சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும், டில்லி-என்சிஆர் பகுதியில் சீரான மற்றும் சிறந்த இணைப்பை ஏற்படுத்தவும் உதவும் ரூ.11,000 கோடி மதிப்பிலான் 2 திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இந்த இரண்டு முக்கிய நெடுஞ்சாலை திட்டங்களில்,துவாரகா விரைவுச்சாலையின் 10.1 கி.மீ நீளமுள்ள டில்லி பிரிவு சுமார் ரூ.5,360 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது, 5.9 கி.மீ. ஷிவ் மூர்த்தி சந்திப்பிலிருந்து துவாரகா செக்டார்-21 வரையிலும், 4.2 கி.மீ. துவாரகா செக்டார்-21 ஐ டில்லி-ஹரியானா எல்லையுடன் இணைக்கும்.
பொதுமக்களுக்காக திறக்கப்படும் இரண்டாவது திட்டம், அலிப்பூர் முதல் டிச்சான் கலான் வரையிலான நகர்ப்புற விரிவாக்க சாலை- பகுதி 2 ஆகும், இது பகதூர்கர் மற்றும் சோனிபட்டிற்கான புதிய இணைப்புகளுடன் சுமார் ரூ. 5,580 கோடி செலவில் கட்டப்பட்டது.