sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போக்குவரத்து விதிமீறல் அபராதம் வீடு தேடி வசூலிக்க போலீஸ் முடிவு

/

போக்குவரத்து விதிமீறல் அபராதம் வீடு தேடி வசூலிக்க போலீஸ் முடிவு

போக்குவரத்து விதிமீறல் அபராதம் வீடு தேடி வசூலிக்க போலீஸ் முடிவு

போக்குவரத்து விதிமீறல் அபராதம் வீடு தேடி வசூலிக்க போலீஸ் முடிவு


ADDED : பிப் 10, 2024 06:29 AM

Google News

ADDED : பிப் 10, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்தாமல், நீண்ட நாட்களாக 'டிமிக்கி' கொடுப்பவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வசூலிக்க, பெங்களூரு போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

போலீசார் எவ்வளவு எச்சரித்தாலும், போக்குவரத்து விதிகளை மீறி செல்வோர், தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சிசிடிவி, பாடி கேமரா, சிக்னல்களில் கேமரா என போலீசாரும் தீவிர கண்காணிப்பு நடத்தி, விதிமுறை மீறுவோருக்கு அபராதம் விதிக்கின்றனர்.

கடந்தாண்டு அபராதம் செலுத்துவோருக்கு, 50 சதவீதம் தள்ளுபடி வழங்கியதால், கோடிக்கணக்கான ரூபாய் வசூலானது. ஆனாலும், இன்னும் பலர் அபராதம் செலுத்தாமல் 'டிமிக்கி' கொடுக்கின்றனர்.

இத்தகையோருக்கு போக்குவரத்து போலீசார் அதிர்ச்சி அளிக்க தயாராகி உள்ளனர். அதாவது, அபராத தொகை 50,000 ரூபாய் வரை செலுத்தாமல் இருப்போரின் வீடுகளுக்கே போலீசார் நேரில் சென்று வசூலிக்க திட்டமிட்டுள்ளனர்.

பெங்களூரு நகரில், இதுவரை 2,681 பேர், 50 ஆயிரத்துக்கும் அதிகமான ரூபாய் அபராத தொகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

இது, பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதற்கிடையில், அபராதம் செலுத்துவோருக்கு 'இ - சலான்' முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் 722 போக்குவரத்து போலீஸ் நிலையத்திலும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் மூலம், கைப்பட எழுதும் ரசீதுக்கு பதில், குறிப்பிட்ட தொகை அபராதமாக பெறப்பட்டுள்ளது என்று சம்பந்தப்பட்டவரின் மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் செல்லும்.






      Dinamalar
      Follow us