sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முதியோருடன் வாரந்தோறும் உரையாட போலீசுக்கு உத்தரவு

/

முதியோருடன் வாரந்தோறும் உரையாட போலீசுக்கு உத்தரவு

முதியோருடன் வாரந்தோறும் உரையாட போலீசுக்கு உத்தரவு

முதியோருடன் வாரந்தோறும் உரையாட போலீசுக்கு உத்தரவு


ADDED : டிச 25, 2024 12:50 AM

Google News

ADDED : டிச 25, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:“முதியோருடன் வாராந்திர உரையாடல் கூட்டம் நடத்தி, அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டும்,” என, துணை நிலை கவர்னர் சக்சேனா, டில்லி மாநகரப் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கவர்னர் மாளிகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், 600க்கும் மேற்பட்ட முதியோருடன் துணைநிலை கவர்னர் சக்சேனா உரையாடினார்.

இதைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தில் சக்சேனா வெளியிட்டுள்ள பதிவு:

டில்லி மாநகரப் போலீஸ் அதிகாரிகள், முதியோருடன் வாரந்தோறும் உரையாடல் நடத்த வேண்டும். இதற்கான அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலங்களிலும் இடம் ஒதுக்க வேண்டும். முதியோருக்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். முதியோர் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க கலெக்டர் அலுவலகங்களில் பிரத்யேக உதவி மையங்கள் அமைக்க வேண்டும்.

கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பல விஷங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டனர். சாலையில் தண்ணீர் தேங்குதல், வீடு மற்றும் பொது இடங்களில் துன்புறுத்தல், அரசு அலுவலகங்களில் அலைக்கழிப்பு, நடைபாதை ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசல் மற்றும் தரமற்ற சாலைகள், சைபர் குற்றம் ஆகியவற்றால் முதியோர் பாதிக்கப்படுவதை கூறினர்.






      Dinamalar
      Follow us