ADDED : பிப் 20, 2025 10:37 PM
முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ரேகா குப்தா, உள்துறை, நிதி, சேவை, லஞ்ச ஒழிப்பு, திட்டம் ஆகிய துறைகளை தன்னிடம் வைத்துள்ளார்.
துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பர்வேஷ் வர்மாவுக்கு கல்வி, பொதுப்பணி, போக்குவரத்து துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கபில் மிஸ்ராவுக்கு நீர், சுற்றுலா, கலாசாரம் ஆகிய இலாகாக்களும், மஞ்சிந்தர் சிங் சிர்சாவுக்கு சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு, தொழிற்சாலைகள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ரவீந்தர் குமார் இந்திரஜுக்கு சமூகநலத்துறை, எஸ்.சி., எஸ்.டி., நலன், தொழிலாளர் நலத்துறைகளும், ஆஷிஷ் சூட்டுக்கு வருவாய், சுற்றுச்சூழல், உணவு மற்றும் விநியோகத்துறைகளும் பங்கஜ் குமார் சிங்கிற்கு சட்டம், சட்டசபை விவகாரங்கள், வீட்டுவசதி ஆகிய துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
- நமது நிருபர் -