sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மண்பாண்ட தொழிலாளிக்கு ரூ.13 கோடி வரி; அடுத்தடுத்த நோட்டீசால் அதிர்ச்சி

/

மண்பாண்ட தொழிலாளிக்கு ரூ.13 கோடி வரி; அடுத்தடுத்த நோட்டீசால் அதிர்ச்சி

மண்பாண்ட தொழிலாளிக்கு ரூ.13 கோடி வரி; அடுத்தடுத்த நோட்டீசால் அதிர்ச்சி

மண்பாண்ட தொழிலாளிக்கு ரூ.13 கோடி வரி; அடுத்தடுத்த நோட்டீசால் அதிர்ச்சி

15


ADDED : ஏப் 18, 2025 06:18 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 06:18 AM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டா : ராஜஸ்தானில், மாதம் 8,000 ரூபாய் சம்பாதிக்கும் மண்பாண்ட தொழிலாளிக்கு, 13 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ராஜஸ்தானின் பூந்தி மாவட்டத்தில் உள்ள ஜாலிஜி கா பரானா கிராமத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி விஷ்ணு குமார் பிரஜாபத், 32. பட்டதாரியான இவர், களிமண்ணால் செய்த சிற்பம், சுடுமண்ணால் செய்த பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்.

இதன் வாயிலாக ஆண்டுதோறும் 95,000 ரூபாயை விஷ்ணு சம்பாதித்து வருகிறார். கடந்த மாதம் 11ல், விஷ்ணுவுக்கு வருமான வரித் துறை அதிகாரிகளிடம் இருந்து நோட்டீஸ் வந்தது.

அதில், '2020 - 21ம் நிதியாண்டில் 10.61 கோடி ரூபாய் வருமானம் பெற்றதற்கு வருமான வரி செலுத்தவில்லை' என கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசாரிடம் முறையிட்டபோது, அவரது புகாரை யாரும் ஏற்கவில்லை. இதையடுத்து, பட்டய கணக்காளரின் உதவியை விஷ்ணு நாடினார்.

முடிவில், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள தனியார் நிறுவனம், விஷ்ணுவின் ஆதார் எண் மற்றும் பான் எண்ணை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கள் நிறுவனம் வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக இரண்டு மிகப்பெரிய வணிக பரிவர்த்தனைகளை விஷ்ணு பெயரில் செய்ததும் அம்பலமானது.

முதலில் 10.61 கோடி ரூபாய்க்கும், அடுத்ததாக 2.83 கோடி ரூபாய்க்கும் பணப்பரிவர்த்தனை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, பூந்தி மாவட்ட எஸ்.பி.,யிடம் விஷ்ணு புகாரளித்தார்.

பின்னர், இந்த வழக்கு சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, இரண்டாவது பரிவர்த்தனையான 2.83 கோடி ரூபாய்க்கு வரி செலுத்த வலியுறுத்தி விஷ்ணுவுக்கு இரண்டாவது நோட்டீஸ், வருமான வரித் துறையிடம் இருந்து கடந்த 30ம் தேதி வந்தது. இது குறித்தும் சைபர் கிரைம் போலீசாரிடம் விஷ்ணு தெரிவித்தார். அவரின் புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூந்தி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்திடம் தினக் கூலி வேலைக்காக ஆதார் மற்றும் பான் விபரங்களை விஷ்ணு அளித்திருந்த நிலையில், அங்கிருந்து அந்த ஆவணங்கள் கசிந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி செய்த மும்பை நிறுவனத்திடமும் விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us