sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு; தண்டனை விபரம் நாளை வெளியீடு

/

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு; தண்டனை விபரம் நாளை வெளியீடு

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு; தண்டனை விபரம் நாளை வெளியீடு

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு; தண்டனை விபரம் நாளை வெளியீடு

8


ADDED : ஆக 01, 2025 02:10 PM

Google News

ADDED : ஆக 01, 2025 02:10 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை விபரம் நாளை வெளியிடப்பட இருக்கிறது.

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுராவில் தன் வீட்டில் பணியாற்றி வந்த, 47 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், ஹாசன் தொகுதி ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, கடந்தாண்டு கைது செய்யப்பட்டார்.

விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி கஜானன் பட் அறிவித்திருந்தார். போதிய தொழில்நுட்ப தகவல் கிடைக்காத நிலையில், இன்றைய தினத்திற்கு (ஆக.,1) தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரஜ்வல் ரேவண்ணா, நீதிபதி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிபதி அறிவித்தார். அவருக்கான தண்டனை விபரங்களை நாளை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us