sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சமூக நீதி பெயரில் ஏமாற்றிய முந்தைய அரசுகள்: பிரதமர் மோடி விமர்சனம்

/

சமூக நீதி பெயரில் ஏமாற்றிய முந்தைய அரசுகள்: பிரதமர் மோடி விமர்சனம்

சமூக நீதி பெயரில் ஏமாற்றிய முந்தைய அரசுகள்: பிரதமர் மோடி விமர்சனம்

சமூக நீதி பெயரில் ஏமாற்றிய முந்தைய அரசுகள்: பிரதமர் மோடி விமர்சனம்

7


ADDED : ஏப் 19, 2024 12:51 PM

Google News

ADDED : ஏப் 19, 2024 12:51 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்ரோஹா: ''நமது நாட்டில் முந்தைய அரசுகள் சமூக நீதி என்ற பெயரில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி.,யை ஏமாற்றி வந்தன. ஆனால் அம்பேத்கர் கண்ட சமூக நீதி கனவை நான் நிறைவேற்ற வருகிறேன்'' என பிரதமர் மோடி பேசினார்.

உத்தர பிரதேசம் மாநிலம் அம்ரோஹா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று சில தொகுதிகளில் முதல்கட்ட லோக்சபா தேர்தல் நடக்கிறது. இது ஜனநாயக திருவிழாவின் மிகப்பெரிய நாள். அனைத்து வாக்காளர்களும் தங்களின் ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அம்ரோஹாவை சேர்ந்த முகமது ஷமி செய்த அற்புதமான சாதனையை உலகமே பார்த்தது. விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக முகமது ஷமிக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கியது.

தற்போதைய லோக்சபா தேர்தல், நாட்டின் எதிர்காலத்திற்கான தேர்தல். கிராமங்கள் மற்றும் ஏழைகளுக்கான தொலைநோக்கு மற்றும் இலக்குகளுடன் பா.ஜ., முன்னேறி வருகிறது. ஆனால் இண்டியா கூட்டணி கட்சிகள் மக்களின் முழு ஆற்றலையும், கிராமங்களையும் பின்னோக்கி நகர்த்துவதில் குறியாக உள்ளன.

நமது நாட்டில் முந்தைய அரசுகள் சமூக நீதி என்ற பெயரில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி.,யை ஏமாற்றி வந்தன. ஆனால் அம்பேத்கர் கண்ட சமூக நீதி கனவை நான் நிறைவேற்றி வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us