sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக உயர் பதவிகளுக்கு தனியார் நிர்வாகிகளா? வங்கி ஊழியர்கள் கொந்தளிப்பு

/

பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக உயர் பதவிகளுக்கு தனியார் நிர்வாகிகளா? வங்கி ஊழியர்கள் கொந்தளிப்பு

பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக உயர் பதவிகளுக்கு தனியார் நிர்வாகிகளா? வங்கி ஊழியர்கள் கொந்தளிப்பு

பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக உயர் பதவிகளுக்கு தனியார் நிர்வாகிகளா? வங்கி ஊழியர்கள் கொந்தளிப்பு

2


ADDED : அக் 12, 2025 12:06 AM

Google News

2

ADDED : அக் 12, 2025 12:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக உயர் பதவிகளை தனியார் துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்க, மத்திய அரசு முடிவு செய்திருப்பது மிகவும் ஆபத்தானது' என, வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்.ஐ.சி.,யின் நிர்வாகத்தில் உள்ள உயர் பதவிகளுக்கு, தனியார் துறையை சேர்ந்த நிர்வாகிகளை பணியமர்த்துவது குறித்து பரிசீலிக்க, மத்திய அரசு புதிய விதியை கொண்டு வந்துள்ளது. இதற்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து யு.எப்.பி.யு., எனப்படும், வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த புதிய விதி, பொதுத்துறை வங்கிகளின் தலைமை பொறுப்புகளை தனியார் மயமாக்கிவிடும். பாரத ஸ்டேட் வங்கி சட்டம், வங்கி நிறுவனங்கள் சட்டம் மற்றும் எல்.ஐ.சி., சட்டங்களில் எந்த திருத்தங்களையும் கொண்டு வராமல், நேரடியாக மத்திய அரசு இந்த மாற்றங்களை அறிமுகம் செய்திருக்கிறது.

தனியார் துறையை சேர்ந்தவர்களை உயர் பொறுப்பு வகிக்க அனுமதிப்பது பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கும் சட்டப்பூர்வ பொறுப்பை நீர்த்துப் போக செய்து விடும். பார்லி.,யின் பொறுப்பையும் குறைத்து விடும்.

தேசியமயமாக்கலுக்குப் பின் வகுக்கப்பட்ட வழி காட்டு நெறிமுறைகளையும் அழித்து விடும். தேசத்தின் பொருளாதார இறையாண்மைக்கு பொதுத்துறை வங் கிகள் தான் முதுகெலும்பாக செயல்படுகின்றன.

பின்வாசல் வழியாக அதன் சட்டப்பூர்வ தன்மையை நீர்த்துப் போக செய்யவோ, தனியார் மயமாக்கவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us