sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட் இன்று இரவு விண்ணில் பாய்கிறது

/

பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட் இன்று இரவு விண்ணில் பாய்கிறது

பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட் இன்று இரவு விண்ணில் பாய்கிறது

பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட் இன்று இரவு விண்ணில் பாய்கிறது

2


UPDATED : டிச 30, 2024 06:22 AM

ADDED : டிச 29, 2024 08:31 AM

Google News

UPDATED : டிச 30, 2024 06:22 AM ADDED : டிச 29, 2024 08:31 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று (டிச.,30) இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ அறிவித்தள்ளது. இறுதிகட்ட பணியான 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று இரவு 8.58 மணிக்கு துவங்கியது.

இரண்டு சிறிய விண்கலன்களை ஏவும் 'ஸ்பேடெக்ஸ்' திட்டத்துக்காக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட், ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவ, இஸ்ரோ அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2 என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் சுமந்து செல்கிறது.

ஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் நேர் நிறுத்தப்பட்டுள்ள ராக்கெட்டின் உட்பகுதியில் இரு செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று (டிச.,30) இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ அறிவித்தள்ளது. இறுதிகட்ட பணியான 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று இரவு 8.58 மணிக்கு துவங்கியது. தனித்தனியாக இரு விண்கலங்களை விண்ணில் ஏவி அவற்றை இணைய செய்வதற்கான சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த 4வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கவும், விண்வெளிக்கு வீரர்களை அனுப்பவும் இந்த திட்டம் பேருதவியாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us