sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து பயங்கர விபத்து; தீயில் 2 பேர் பலி

/

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து பயங்கர விபத்து; தீயில் 2 பேர் பலி

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து பயங்கர விபத்து; தீயில் 2 பேர் பலி

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து பயங்கர விபத்து; தீயில் 2 பேர் பலி


ADDED : ஆக 23, 2025 09:27 AM

Google News

ADDED : ஆக 23, 2025 09:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹோஷியார்பூர்; பஞ்சாப்பில் எல்பிஜி டேங்கர் லாரி, மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

மண்டியாலாஅடாவில் உள்ள தொழில்நகரம் பகுதியில் இந்த விபத்து நேரிட்டது. அதிவேகமாக வந்த எல்பிஜி டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக வளைவில் திரும்பும் போது எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதி திடீரென கவிழ்ந்தது. விபத்தில் லாரி தீப்பிடித்தது.

மளமளவென பற்றிய தீ, அங்கிருந்த வீடுகளுக்கும் பரவியது. இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அலறி அடித்து பீதியில் ஓட்டம் பிடித்தனர். 15க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தீ பரவியது.

தகவலறிந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். சிறிது நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை அவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தில் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து போலீஸ் துணை கமிஷனர் ஆஷிகா ஜெயின் கூறியதாவது:

பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி முழு விசாரணை தொடங்கப்படும். சேத மதிப்பும் கணக்கிடப்படும்.

விபத்து ஏற்பட்ட போது எல்பிஜி டேங்கர் லாரியில் எரிவாயு கசிந்து தீப்பிடித்து இருக்கலாம் என்று தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இவ்வாறு ஆஷிகா ஜெயின் கூறினார்.






      Dinamalar
      Follow us