sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பார்லி., சிறப்பு கூட்டம் நடத்த பிரதமருக்கு ராகுல் எம்.பி., கடிதம்

/

பார்லி., சிறப்பு கூட்டம் நடத்த பிரதமருக்கு ராகுல் எம்.பி., கடிதம்

பார்லி., சிறப்பு கூட்டம் நடத்த பிரதமருக்கு ராகுல் எம்.பி., கடிதம்

பார்லி., சிறப்பு கூட்டம் நடத்த பிரதமருக்கு ராகுல் எம்.பி., கடிதம்

6


ADDED : மே 12, 2025 01:00 AM

Google News

ADDED : மே 12, 2025 01:00 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்து விவாதிக்க பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., - எம்.பி.,யுமான ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய சூழலில், போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம் மாலை வெளியானது. இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதலில் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இதையடுத்து, நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, 'மாலை 5:00 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது' என, அறிவித்தார்.

இந்நிலையில், போர் தொடர்பாகவும், அமெரிக்க அதிபரின் தலையீடு குறித்தும் விவாதிக்க பார்லி., சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல் எழுதிய கடிதம்:

பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் ஒருமனதான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆப்பரேஷன் சிந்துார் மற்றும் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை பற்றி விவாதிப்பது மிகவும் முக்கியம்.

இது வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், நம் கூட்டுத்தீர்மானத்தை நிரூபிக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த கோரிக்கையை நீங்கள் தீவிரமாகவும், விரைவாகவும் பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கருத்தை வலியுறுத்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்து கட்சி கூட்டம்

காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ''இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடுநிலையாக இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபி கூறியுள்ளது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ''சிம்லா ஒப்பந்தத்தை நாம் கைவிட்டுவிட்டோமா? மூன்றாம் தரப்பு மத்தியஸ்திற்கான கதவுகளை நாம் திறந்துவிட்டோமா என்ன? ஆப்பரேஷன் சிந்துார் குறித்தும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்தும் விவாதிக்க பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us