sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'முடா' அலுவலகத்தில் 'ரெய்டு'

/

'முடா' அலுவலகத்தில் 'ரெய்டு'

'முடா' அலுவலகத்தில் 'ரெய்டு'

'முடா' அலுவலகத்தில் 'ரெய்டு'

3


UPDATED : அக் 19, 2024 02:52 PM

ADDED : அக் 19, 2024 01:01 AM

Google News

UPDATED : அக் 19, 2024 02:52 PM ADDED : அக் 19, 2024 01:01 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: 'முடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், முதல்வர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதன்படி, முதல்வர், அவரது மனைவி, மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி, நிலத்தை விற்ற தேவராஜு ஆகியோர் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அமலாக்க துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது.

இந்நிலையில், மைசூரில் உள்ள 'முடா' அலுவலகம், தாலுகா அலுவலகம், கெங்கேரியில் உள்ள தேவராஜு வீடு ஆகிய மூன்று இடங்களில் நேற்று காலை, அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

முடா அலுவலகத்தில், 20 அதிகாரிகள் குழு உள்ளே நுழைந்து, அலுவலகத்தின் கேட்டை பூட்டியது. சி.ஆர்.பி.எப்., எனும் மத்திய ரிசர்வ் போலீசார் 12 பேர், துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us