ADDED : மே 03, 2025 08:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் நேற்று முன் தினம் அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ஏராளமான இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்து விழுந்து டில்லியில் நான்கு பேர் உட்பட மொத்தம் ஏழு பேர் உயிரிழந்தனர். கார் மற்றும் பைக்குகள் நசுங்கின. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

