sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மூணாறில் மழைக்கு ஓய்வு: பயணிகள் உற்சாகம்

/

மூணாறில் மழைக்கு ஓய்வு: பயணிகள் உற்சாகம்

மூணாறில் மழைக்கு ஓய்வு: பயணிகள் உற்சாகம்

மூணாறில் மழைக்கு ஓய்வு: பயணிகள் உற்சாகம்


ADDED : ஆக 02, 2025 02:08 AM

Google News

ADDED : ஆக 02, 2025 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரள மாநிலம் மூணாறில் கடந்த சில நாட்களாக இருந்த மழை சூழல் மாறி நேற்று வெயில் சுட்டெரித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மூணாறில் கடந்த வாரம் தென் மேற்கு பருவமழை வலுவடைந்து தீவிர மாக பெய்தது. நடப்பு பருவ மழை சீசனில் அதிக மாக ஜூலை 26ல் 210.38 மி.மீ., பதிவானது. அன்று இரவு கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அரசு தாவர வியல் பூங்கா அருகே ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மூணாறு அந்தோணியார் காலனியைச் சேர்ந்த கணேசன் 58, இறந்தார். அதே பகுதியில் ஜூலை 27ல் காலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு மூன்று நாட்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மழை அதிகரித்ததால் நிலச்சரிவு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என மக்கள் அஞ்சினர்.

மழை படிப்படியாக குறைந்து நேற்று வெயில் சுட்டெரித்ததால் சுற்றுலா பயணிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாட்டுபட்டி, குண்டளை அணைகளில் சுற்றுலா படகுகளில் பயணித்தனர். மாலை 4:00 மணிக்கு மேல் மேகங்கள் சூழ்ந்தது.






      Dinamalar
      Follow us