sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அடுத்த 3 தினங்களுக்கு மழை; வானிலை மையம் தகவல்

/

அடுத்த 3 தினங்களுக்கு மழை; வானிலை மையம் தகவல்

அடுத்த 3 தினங்களுக்கு மழை; வானிலை மையம் தகவல்

அடுத்த 3 தினங்களுக்கு மழை; வானிலை மையம் தகவல்


ADDED : நவ 01, 2024 11:25 PM

Google News

ADDED : நவ 01, 2024 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு; 'கர்நாடகாவில் வரும் மூன்று நாட்கள் மழை பெய்யும்' என, மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன் விபரம் வருமாறு:

இன்று சனிக்கிழமை முதல் அடுத்த மூன்று தினங்கள் வடக்கு கர்நாடகாவின் உட்பகுதி மற்றும் தெற்கு கர்நாடகாவின் உட்பகுதி மாவட்டங்களில் சாதாரண மழை பெய்யும். ஷிவமொக்கா, ராம்நகர், மைசூரு, மண்டியா, குடகு, சிக்கமகளூரு மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று விஜயநகரா மாவட்டம், ஹரபனஹள்ளியில் 5 செ.மீ., ஹாவேரியில் 4 செ.மீ., தார்வாட், சிக்கமகளூரு, துமகூரு, ஷிவமொக்காவில், 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

கடந்த இரு தினங்களாக பெய்த மழையின் காரணமாக, பெங்களூரு நகரம் பாதிக்கப்பட்டது. சாலைகளில் நீர் தேங்கி, வாகன போக்குவரத்து பாதித்தது.

மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். நகரில் பட்டாசு விற்பனை பாதிப்படைந்தது. நேற்று 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

'பெங்களூரு நகரில் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை தொடரும்' என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us