sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜனாதிபதி குறித்த காங். விமர்சனம்; குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம்

/

ஜனாதிபதி குறித்த காங். விமர்சனம்; குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம்

ஜனாதிபதி குறித்த காங். விமர்சனம்; குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம்

ஜனாதிபதி குறித்த காங். விமர்சனம்; குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம்

15


UPDATED : ஜன 31, 2025 04:54 PM

ADDED : ஜன 31, 2025 04:51 PM

Google News

UPDATED : ஜன 31, 2025 04:54 PM ADDED : ஜன 31, 2025 04:51 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஜனாதிபதி சோர்வு அடைந்ததாக சோனியா தெரிவித்த கருத்துக்கு குடியரசுத்தலைவர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

பார்லி. கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தொடக்க உரை நிகழ்த்தினார். அதன் பின்னர் வழக்கமான முறையில் அவரின் உரை குறித்து காங்கிரஸ் மாஜி தலைவர் சோனியாவிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், ஜனாதிபதி இறுதிப்பகுதியை வாசிக்கும் போது சோர்வு அடைந்துவிட்டார், பேசமுடியவில்லை, பாவம் என்று கூறி இருந்தார். சோனியாவுக்கு ஆதரவாக ராகுலும் கருத்துகளை வெளியிட்டு இருந்தார். காங்கிரசின் இந்த கருத்துகள் இழிவானது என்று பா.ஜ., கடும் விமர்சனம் செய்திருந்தது.

இந் நிலையில் சோனியாவின் கருத்துக்கு ஜனாதிபதி மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது;

உரையின் போது ஜனாதிபதி சோர்வு அடையவில்லை. காயப்படுத்தும் வகையில் காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி சோர்வு அடைந்துவிட்டார், அவரால் பேசமுடியவில்லை என்று கூறி இருந்தனர்.

பார்லியில் ஜனாதிபதி எந்த நிலையிலும் சோர்வு அடையவில்லை. விளிம்புநிலை மக்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு ஜனாதிபதி பேசிய உரை சோர்வை தராது.

இவ்வாறு அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us