sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மலம்புழா அணையில் இருந்து 4 மதகுகளில் உபரி நீர் திறப்பு

/

மலம்புழா அணையில் இருந்து 4 மதகுகளில் உபரி நீர் திறப்பு

மலம்புழா அணையில் இருந்து 4 மதகுகளில் உபரி நீர் திறப்பு

மலம்புழா அணையில் இருந்து 4 மதகுகளில் உபரி நீர் திறப்பு


ADDED : அக் 08, 2024 05:47 AM

Google News

ADDED : அக் 08, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: மலம்புழா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, அணை பாதுகாப்பு கருதி, 4 மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டது.

கேரளா மாநிலத்தின் முக்கிய அணைகளில் ஒன்று மலம்புழா. 377 அடி உயரமுள்ள இந்த அணை பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில், பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, தற்போது, 370 அடியை தொட்டுள்ளது.

இதையடுத்து, அணையின் பாதுகாப்பு மற்றும் வெள்ள பாதிப்பு தவிர்க்க, நேற்று காலை, 8:30 மணிக்கு அணையின் 4 மதகுகள் வழியாக, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

கடந்த இரு மாதங்களில், மூன்றாவது முறையாகும் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படப்பட்டது குறிப்பிடத்தக்கது. மதகுகள் திறக்கப்பட்டு, நீர் வெளியேறும் காட்சியை சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.

மலம்புழா நீர்ப்பாசன பிரிவு நிர்வாக பொறியாளர் மோகன் கூறுகையில், ''அணைக்கு நீர் வரத்தை பொறுத்து, மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படும்.

மூகைப்புழை, கல்பாத்திப்புழை, பாரதப்புழை ஆகிய ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; ஆற்றில் நீர்மட்டம் அதிகரிக்கும் போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us