sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விஜய் மல்லையா, நீரவ் மோடி சொத்துகளை விற்றதில் ரூ.15 ஆயிரம் கோடி மீட்பு: நிர்மலா சீதாராமன்

/

விஜய் மல்லையா, நீரவ் மோடி சொத்துகளை விற்றதில் ரூ.15 ஆயிரம் கோடி மீட்பு: நிர்மலா சீதாராமன்

விஜய் மல்லையா, நீரவ் மோடி சொத்துகளை விற்றதில் ரூ.15 ஆயிரம் கோடி மீட்பு: நிர்மலா சீதாராமன்

விஜய் மல்லையா, நீரவ் மோடி சொத்துகளை விற்றதில் ரூ.15 ஆயிரம் கோடி மீட்பு: நிர்மலா சீதாராமன்

18


UPDATED : டிச 18, 2024 03:18 PM

ADDED : டிச 18, 2024 03:03 PM

Google News

UPDATED : டிச 18, 2024 03:18 PM ADDED : டிச 18, 2024 03:03 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:'' வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரின் சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த பணம் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது'', என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

லோக்சபாவில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: மோசடியாளர்களிடம் இருந்து ரூ.22, 280 கோடி பணத்தை அமலாக்கத்துறை வெற்றிகரமாக மீட்டு உள்ளது. அதில் முக்கியமான வழக்குகளை மட்டும் கூறுகிறேன்.

விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.14,131.6 கோடி வங்கிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

நீரவ் மோடி சொத்துகளை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.1,052. 58 கோடியும்

தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் கழக ஊழல் தொடர்பாக பறிமுதல் சொத்துகள் விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.17.47 கோடியும் வங்கிகளுக்கு திரும்பியது.

எஸ்ஆர்எஸ் நிறுவனங்கள்- ரூ.20.15 கோடி

ரோஸ்வேலி நிறுவனம் - ரூ.19.40 கோடி

சூர்யா பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் - ரூ.185.13 கோடி

நவேரா சேக் உள்ளிட்டவர்கள் - ரூ.226 கோடி

நாயுடு அம்ருதேஷ் ரெட்டி- ரூ.12.73 கோடி

மெகுல் சோக்சி - ரூ.2,565.90 கோடி

நபிசா ஓவர்சீஸ் உள்ளிட்டவர்கள்- ரூ.25.38 கோடி வங்கிகளுக்கு திரும்பி உள்ளது.

பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாரையும் விடவில்லை என்பது முக்கியமான விஷயம். வங்கிகளில் இருந்து சென்ற பணம், மீண்டும் வங்கிகளுக்கே திரும்பும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

பல வங்கிகளில் கடன் வாங்கி ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது லண்டனில் உள்ளார். அதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்சி ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தார், நீரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மெகுல் சோக்சி, தற்போது ஆண்டிகுவாவில் உள்ளார்.






      Dinamalar
      Follow us