sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.6,691 கோடி வரவில்லை: ரூ.2000 நோட்டு கணக்கு சொல்கிறது ரிசர்வ் வங்கி

/

ரூ.6,691 கோடி வரவில்லை: ரூ.2000 நோட்டு கணக்கு சொல்கிறது ரிசர்வ் வங்கி

ரூ.6,691 கோடி வரவில்லை: ரூ.2000 நோட்டு கணக்கு சொல்கிறது ரிசர்வ் வங்கி

ரூ.6,691 கோடி வரவில்லை: ரூ.2000 நோட்டு கணக்கு சொல்கிறது ரிசர்வ் வங்கி

10


UPDATED : ஜன 01, 2025 10:16 PM

ADDED : ஜன 01, 2025 08:36 PM

Google News

UPDATED : ஜன 01, 2025 10:16 PM ADDED : ஜன 01, 2025 08:36 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பொது மக்களிடம் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 98.12 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதேநேரத்தில் ரூ.6,691 கோடி மதிப்பிலான நோட்டுகள் மட்டும் திரும்ப வரவில்லை.

கடந்த 2023, மே 19ம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது, புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அக்., 07 வரை அனைத்து வங்கிக்கிளைகளிலும், இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அக்.,09 முதல், ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அவை திரும்ப பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து, தபால் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்ப வேண்டும் எனக்கூறியிருந்தது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டிச.,31 நிலவரப்படி 98.12 சதவீத 2 ஆயிரம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளது. இன்னும் ரூ.6,691 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே, அரசிற்கு வரவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us