sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடியை எடுத்துச் செல்லலாம்; மத்திய அரசு சலுகை

/

ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடியை எடுத்துச் செல்லலாம்; மத்திய அரசு சலுகை

ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடியை எடுத்துச் செல்லலாம்; மத்திய அரசு சலுகை

ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடியை எடுத்துச் செல்லலாம்; மத்திய அரசு சலுகை


ADDED : நவ 28, 2025 05:59 PM

Google News

ADDED : நவ 28, 2025 05:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஐயப்ப பக்தர்கள் விமான பயணத்தின் போது இருமுடியை எடுத்துச் செல்லலாம் என்று மத்திய அரசு சலுகையை அறிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் புகழ்பெற்றது. இந்த கோவிலுக்கு தற்போது பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு சென்று வருகின்றனர். விமானங்களில் ஐயப்ப பத்கர்கள் பயணிக்கும் போது இருமுடி கட்டிக் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

இந்த நிலையில், இருமுடி பைகளை அவர்கள் கொண்டு செல்ல மத்திய அரசின் தரப்பில் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தமது எக்ஸ் வலை தள பதிவில் வெளியிட்டுள்ளார்.

அவர் அதில் கூறி உள்ளதாவது:

சபரிமலை புனித யாத்திரை செல்லும் பக்தர்கள் விமானங்களில் இருமுடியை எடுத்துச் செல்லலாம். இந்த சலுகை நவ.28 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜன.20ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும்.

பக்தர்களின் ஆழமான உணர்வுகளை புரிந்து கொண்டு, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்படும். ஒவ்வொரு சமூகத்தின் நம்பிக்கை, கண்ணியத்தை உறுதி செய்ய அரசு அர்ப்பணிப்புடன் இருக்கிறது.

இவ்வாறு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us