ADDED : மார் 19, 2024 06:49 AM

பெங்களூரு: பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., சதானந்தகவுடா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:
வெவ்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என்னை தொடர்பு கொண்டனர். டில்லி, கர்நாடகாவில் வெவ்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பா.ஜ., தலைவர்கள் என்னுடன், சமாதான பேச்சு நடத்தி இருப்பது உண்மை.
என் குடும்பத்தினருடன் ஆலோசித்து, இன்று முடிவு அறிவிப்பேன். ஆரம்பத்தில் எனக்கு தான் 'சீட்' என்றனர். பின், எனக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. சில நிகழ்வுகளை வெளியில் சொல்ல வேண்டியுள்ளது.
அரசியலில், ஏற்றம், இறக்கம் அனைத்தும் சகஜம். ஆனால், வேண்டுமென்றே செய்திருப்பது மனதிற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதிருப்தி ஏற்பட்டுள்ள அனைவரும், மேலிட தலைவர்களை சந்தித்துப் பேசலாம் என்று ஈஸ்வரப்பாவிடம் சொல்லி இருந்தேன். அவரோ சொந்த முடிவை எடுத்துள்ளார். அது பற்றி நான் பேச விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

