sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசு நிலத்தை ஆக்கிரமித்த சமாஜ்வாதி எம்எல்ஏ: மீட்டது மாவட்ட நிர்வாகம்

/

அரசு நிலத்தை ஆக்கிரமித்த சமாஜ்வாதி எம்எல்ஏ: மீட்டது மாவட்ட நிர்வாகம்

அரசு நிலத்தை ஆக்கிரமித்த சமாஜ்வாதி எம்எல்ஏ: மீட்டது மாவட்ட நிர்வாகம்

அரசு நிலத்தை ஆக்கிரமித்த சமாஜ்வாதி எம்எல்ஏ: மீட்டது மாவட்ட நிர்வாகம்


ADDED : செப் 06, 2025 08:50 PM

Google News

ADDED : செப் 06, 2025 08:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சம்பல்: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி எம்எல்ஏ ஆக்கிரமித்த 3.5 பிகாஸ் அரசு நிலத்தை, சம்பல் மாவட்ட நிர்வாகம் மீட்டெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி எம்எல்ஏவாக இக்பால் மஹ்மூத் உள்ளார். இவரும் சில உள்ளூர்வாசிகளும் சேர்ந்து, 4 அரசு நிலங்களான 3.5 பிகாஸ் அரசு நிலத்தை ஆக்கிரமித்து,பழத்தோட்டம் அமைந்துள்ள நிலப்பகுதிகளை விரிவுபடுத்தியதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த சம்பல் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், ஆக்கிரமிக்கப்பட்ட 3.5 பிகாஸ் அரசு நிலத்தை இன்று மீட்டெடுத்தனர்.

இது குறித்து மாவட்ட அதிகாரி விகாஸ் சந்திரா கூறியதாவது:

சமாஜ்வாதி எம்எல்ஏவாக இக்பால் மஹ்மூத் மற்றும் உள்ளூர்வாசிகளான பைஸ் இக்பால், முகமது ஜைத், முகமது ஜூனைத், முகமது அஸ்லாம், ஷான் இக்பால் மற்றும் சுஹைல் இக்பால் ஆகியோரின் பேரில், சர்வே எண் 198 மற்றும் 222 என்ற இரண்டு நிலப்பகுதிகளையும் சேர்ந்து நான்கு அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்து, ஒரு பழத்தோட்டம் அமைந்துள்ள நிலப்பகுதிகளை விரிவுபடுத்தியிருந்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அந்த நிலங்களை,

உள்ளூர் நிர்வாகம் மற்றும் நீர்ப்பாசனத் துறையைச் சேர்ந்த எங்களது குழு, சம்பல் தாலுகாவில் உள்ள மண்டலாய் கிராமத்திற்குச் சென்று, மரங்கள் மற்றும் வேலிகளை அகற்றி ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டெடுத்தோம்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தேதியை தீர்மானிப்பது கடினம் என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு தோராயமாக 3.5 பிகாஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வெட்டப்பட்ட மரங்கள் குறித்து வனத்துறை நடவடிக்கை எடுக்கும், மேலும் எம்.எல்.ஏ. மீது மேலும் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படும்.

​​நிலம் அதிகாரப்பூர்வமாக அரசாங்க கட்டுப்பாட்டில் வந்த பிறகு மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விவகாரம் குறித்து எம்எல்ஏவை தொடர்பு கொண்டபோது, அவர் தற்போது இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார், மேலும் நாளை செய்தியாளர்களிடம் பேசுவதாகவும் கூறினார்.

இவ்வாறு அதிகாரி விகாஸ் சந்திரா கூறினார்.






      Dinamalar
      Follow us