ADDED : ஆக 05, 2025 10:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புது டில்லி: மூத்த வெளியுறவு அதிகாரி சந்தீப் ஆர்யா, பூடானுக்கு இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வெளியுறவுதுறை அறிக்கை:
சந்தீப் ஆர்யா, 1994ம் ஆண்டு பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரி, இவர் 1994ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.தற்போது வெளியுறவு அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக உள்ளார்.
அவர் தற்போது வியட்நாம் சோசலிசக் குடியரசின் தூதராகவும் இருக்கிறார். சந்தீப் ஆர்யா, பூடானுக்கான புதிய இந்திய துாதராக நியமிக்கப்பட்ட நிலையில் விரைவில் பொறுப்பேற்பார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.