ADDED : நவ 19, 2024 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை துறை அடுத்த தலைவராக சஞ்சய் மூர்த்தி நியமிக்கப்பட்டார்.
சி.ஏ.ஜி.,யின் தலைவராக உள்ள கிரீஷ் சந்திர முர்மு கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் பணியாற்றி வரும் நிலையில் .வரும் 20-ம் தேதியுடன் பணி நிறைவு பெறுகிறார்.
இதையடுத்து உயர்கல்வித்துறை செயலரும் மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான சஞ்சய் மூர்த்தியை அடுத்த சி.ஏ.ஜி., தலைவராக, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான நிதி அமைச்சகம் பரிந்துரைத்தது.
சஞ்சய் மூர்த்தி 1989-ம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேச ஐ.ஏ.எஸ்., கேடர் ஆவார். சி.ஏ.ஜி., தலைவராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.