sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பள்ளி ஆசிரியர் நியமன மோசடி: மேற்கு வங்கத்தில் திரிணமுல் எம்எல்ஏ கைது

/

பள்ளி ஆசிரியர் நியமன மோசடி: மேற்கு வங்கத்தில் திரிணமுல் எம்எல்ஏ கைது

பள்ளி ஆசிரியர் நியமன மோசடி: மேற்கு வங்கத்தில் திரிணமுல் எம்எல்ஏ கைது

பள்ளி ஆசிரியர் நியமன மோசடி: மேற்கு வங்கத்தில் திரிணமுல் எம்எல்ஏ கைது

6


ADDED : ஆக 25, 2025 05:00 PM

Google News

6

ADDED : ஆக 25, 2025 05:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் மோசடி செய்த புகாரில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா கைது செய்யப் பட்டார்.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா தலைமையிலான அரசு இயங்கி வருகிறது. இந்நிலையில் திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ஜிபன் கிருஷ்ணா சாஹா. இவர், பிர்பும் பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை தகவல் பெற்றதை அடுத்து சோதனைகள் தொடங்கப்பட்டன, அவர் பின்னர் நடவடிக்கையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

அதை தொடர்ந்து அவரது மனைவி இந்த மோசடி தொடர்பாக ஏஜென்சியால் விசாரிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஜிபன் கிருஷ்ணா சாஹா, கடந்த ஏப்ரல் 2023 இல் சிபிஐ ஆல் கைது செய்யப்பட்டார், மே 2025 இல் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

பள்ளி ஆட்சேர்ப்பு ஊழலின் குற்றவியல் அம்சங்களை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை அதன் பணமோசடி கோணத்தை விசாரித்து வருகிறது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஜிபன் கிருஷ்ணா சாஹாவின் பர்வான் வீடு மற்றும் ரகுநாத்கஞ்சில் உள்ள அவரது மாமியார் குடும்பத்திற்குச் சொந்தமான சொத்துக்களை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் சஹா தனது மொபைல் போனை தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் வீசியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது இரண்டு போன்களும் மீட்கப்பட்டு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்.கூடுதலாக, பிர்பும் மாவட்டத்தில் உள்ள தனிப்பட்ட உதவியாளரின் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

இதன் அடிப்படையில் திரிணாமுல் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா வீட்டில் சோதனை நடத்தியபோது, அதை அறிந்த அவர், தனது வீட்டின் எல்லைச் சுவரில் ஏறி தப்பி ஓட முயன்றார். அப்போது அருகில் இருந்த விவசாய நிலத்தில் இருந்த சேற்றில் கால் சிக்கியபோது அவரை கைது செய்தோம்.

அவர் கோல்கட்டாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார், அங்கு அவர் சிறப்பு அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us