sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமெரிக்கா வரி விதிப்பால் ஈரானுக்கு இந்திய நிறுவனம் ஏற்றுமதி செய்ய முடியாது: சசி தரூர் கவலை

/

அமெரிக்கா வரி விதிப்பால் ஈரானுக்கு இந்திய நிறுவனம் ஏற்றுமதி செய்ய முடியாது: சசி தரூர் கவலை

அமெரிக்கா வரி விதிப்பால் ஈரானுக்கு இந்திய நிறுவனம் ஏற்றுமதி செய்ய முடியாது: சசி தரூர் கவலை

அமெரிக்கா வரி விதிப்பால் ஈரானுக்கு இந்திய நிறுவனம் ஏற்றுமதி செய்ய முடியாது: சசி தரூர் கவலை


ADDED : ஜன 15, 2026 09:53 PM

Google News

ADDED : ஜன 15, 2026 09:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அமெரிக்கா வரி விதிப்பால் 75 சதவீத வரியுடன், எந்த இந்திய நிறுவனமும் ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது என காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் எம்பி சசிதரூர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீத வரி விதிப்பது கவலை அளிக்கிறது. 75 சதவீத வரியுடன், எந்த இந்திய நிறுவனமும் அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது சாத்தியமற்றது. மருந்துப் பொருட்கள் தவிர, மற்றவை லாபகரமானதாக இருக்காது.

இது தொந்தரவாக இருக்கிறது. அரசு என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எனது பார்வையில், இது மிகவும் தீவிரமானது. இந்த வரிகள் குறித்து நான் எப்போதும் கவலைப்படுகிறேன், ஏனென்றால் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட முதல் 25 சதவீதம் கூட ஒரு பிரச்னையாக இருந்தது. இந்தியா ஏற்கனவே அதன் பிராந்திய போட்டியாளர்களை விட அதிக வரிகளை எதிர்கொண்டுள்ளது. இவ்வாறு சசி தரூர் கூறினார்.






      Dinamalar
      Follow us