ADDED : ஜன 30, 2024 07:57 AM

மங்களூரு : ஜெகதீஷ் ஷெட்டர் ஜென்டில்மேன் அரசியல்வாதி என்று, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் சான்றிதழ் கொடுத்து உள்ளார்.
மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஜெகதீஷ் ஷெட்டர் ஜென்டில்மேன் அரசியல்வாதி. அவர் காங்கிரசில் இருந்து விலகியது துரதிர்ஷ்டவசமானது. அவரை எப்படியாவது கட்சியில், தக்க வைத்திருக்க வேண்டும். அவர் நலமுடன் இருக்க, எனது வாழ்த்துகள். கட்சியில் இருந்து வேறு யார் விலகுவர் என்று, எனக்கு தெரியாது. என்னிடம் உளவுத்துறை இல்லை.
எதிர்க்கட்சி தலைவர் அசோக்கிற்கு, முதல்வர் ஆசை வந்து உள்ளது. ஆனால் நிறைவேறாது. பா.ஜ.,வில் முதல்வர் பதவிக்கு வரிசையில் நிற்கின்றனர்.
மாண்டியா கெரகோடுவில், ஹனுமன் உருவம் பொறித்த கொடியை ஏற்றி, பிரச்னையை கிளப்பி விட்டு உள்ளனர். மத நல்லிணக்கம், அமைதியை சீர்குலைக்கும் முயற்சி நடந்து வருகிறது. பெரும்பான்மை சமூகத்தினரை மகிழ்விக்க, பா.ஜ., தவறு செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.