sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கடையை காலி செய்ய மறுத்து துப்பாக்கிச்சூடு

/

கடையை காலி செய்ய மறுத்து துப்பாக்கிச்சூடு

கடையை காலி செய்ய மறுத்து துப்பாக்கிச்சூடு

கடையை காலி செய்ய மறுத்து துப்பாக்கிச்சூடு


ADDED : ஆக 03, 2025 02:27 AM

Google News

ADDED : ஆக 03, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,:கடையை காலி செய்வது தொடர்பான விவகாரத்தில், கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டவர்களை போலீசார் தேடுகின்றனர்.

தென்கிழக்கு டில்லி நிஜாமுதீனில் பர்ஹான், 32, அவருடைய சகோதரர்கள் வாசிம், 33, மற்றும் அப்துல் காலித், 30, ஆகியோர் இணைந்து, 'குயிப்லா பெர்பியூம்ஸ்' என்ற நறுமண பொருட்கள் விற்கும் கடை நடத்துகின்றனர்.

இந்தச் சகோதரர் களின் கடைகளில் ஒன்றில் வாடகைக்கு இருந்த எஹ்சானை, கடையை காலி செய்யுமாறு கூறியிருந்தனர். ஆனால், அவர் கடையை காலி செய்ய மறுத்தார். நேற்று முன் தினம் இரவு நண்பர்களுடன் வந்த எஹ்சான், பர்ஹானுடன் கடும் வாக்குவாதம் செய்தார்.

விவகாரம் முற்றிய நிலையில், எஹ்சானுடன் வந்திருந்தவர்கள், பர்ஹான் மீது துப்பாக்கியால் சுட்டனர். காலில் குண்டு பாய்ந்து விழுந்த பர்ஹான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, எஹ்சான் மற்றும் அவரது நண்பர்களை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us