ADDED : மே 08, 2025 07:38 PM

புதுடில்லி: டில்லியின் மங்கோல்புரியில் முன்விரோதம் காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
டில்லியில் உள்ள மங்கோல்புரியில், சில ஆண்டுகளாக, கும்பல் வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இப்பகுதிகளில் குற்றம் தொடர்பான நடக்கும் சம்பவங்களை குறைக்க போலீஸ், அதிரடி நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்றும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இது குறித்து டில்லி போலிஸ் அதிகாரி கூறியதாவது:
மங்கோல்புரியின் ஹச் பிளாக் அருகே துப்பாக்கிச் சூடு நடந்தாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளோம். இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது. கைதான மூன்று பேர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை தேடிப்பிடிக்கவும், துப்பாக்கிச்சூட்டிற்கு பின்னால் உள்ள நோக்கத்தை புரிந்துகொள்ளவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.

