sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சாம்ராஜ்நகர் தொகுதியை கைப்பற்ற சிவகுமார் வியூகம்!

/

சாம்ராஜ்நகர் தொகுதியை கைப்பற்ற சிவகுமார் வியூகம்!

சாம்ராஜ்நகர் தொகுதியை கைப்பற்ற சிவகுமார் வியூகம்!

சாம்ராஜ்நகர் தொகுதியை கைப்பற்ற சிவகுமார் வியூகம்!


ADDED : பிப் 14, 2024 05:28 AM

Google News

ADDED : பிப் 14, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாம்ராஜ் நகர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருப்பவர் பா.ஜ.,வின் சீனிவாச பிரசாத். இதற்கு முன், காங்கிரஸ் சார்பில், நான்கு முறையும்; ஐக்கிய ஜனதா தளம் சார்பில், ஒரு முறையும் என மொத்தம் ஒரே தொகுதியில் ஆறு முறை எம்.பி.,யாக இருக்கிறார்.

இவருக்கு, 76 வயது ஆவதால், மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். எஸ்.சி.,க்கு ஒதுக்கப்பட்டுள்ள தனி தொகுதியான சாம்ராஜ்நகர், காங்கிரஸ் கோட்டையாகும்.

தனிப்பட்ட செல்வாக்கு


சீனிவாச பிரசாத்தின் தனிப்பட்ட செல்வாக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் அலை காரணமாக 2019ல் அவர் சுலபமாக வெற்றி பெற்றார். அவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்துள்ளதால், தன் மருமகன் ஹர்ஷவர்தனுக்கு வாய்ப்பு வழங்கும்படி கட்சி மேலிடத்தில் கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், 2023 சட்டசபை தேர்தல் முதல், சாம்ராஜ்நகரில் பா.ஜ., தலைவர்களிடையே உட்கட்சி பூசல் நிலவுகிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வகையிலும், தங்கள் கோட்டையை மீண்டும் கைப்பற்றும் வகையிலும், காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.

களத்தில் சிவகுமார்


சாம்ராஜ்நகரை கைப்பற்ற, துணை முதல்வர் சிவகுமாரே நேரடியாக களத்தில் குதித்துள்ளார். அவருக்கு நெருக்கமாக இருக்கும், இரண்டு செல்வாக்கு மிக்க தலைவர்களின் பட்டியல் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரிடம் யாருக்கு காங்., மேலிடம் அனுமதி அளிக்கிறதோ அவர் வெற்றி பெறுவார் என்று உறுதியுடன் கூறியுள்ளார்.

அந்த பெயர்களை பகிரங்கப்படுத்தாமல், இருவரையும் கட்சி பணியில் ஈடுபடும்படி அறிவுறுத்தியுள்ளார். யாருக்கு வேட்பாளர் ஆகும் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும்.

எந்த காரணத்துக்கும் பா.ஜ., வெற்றி பெற கூடாது என்பதற்காக, சில செல்வாக்கு மிக்க பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களை காங்கிரசுக்கு இழுப்பதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ் தான், சாம்ராஜ்நகர் பொறுப்பு அமைச்சராகவும் இருக்கிறார். தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பட்ஜெட்டிலும் குறிப்பிட்ட திட்டங்களை அறிவிக்க உள்ளது.






      Dinamalar
      Follow us